பக்கம் எண் :

128கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

12. தமிழர் திருநாள்

தைபிறக்க வழிபிறக்கும் என்பர் மேலோர்;
      தமிழகத்து வழிவகுக்க வந்தாய் பொங்கல்!
பொய்யுறக்கம் கொள்கின்ற தமிழர் இந்நாள்
      பொங்கிஎழுத் தாற்பகைமை தூள்தூள் ஆகும்,
செய்புரக்கும் உழவோரே செங்கோல் தாங்கிச்
      செந்தமிழ ஆட்சியினைச் செய்வர், நம்மோர்
கைசிறக்கும் கலைசிறக்கும் தொழில்சி றக்கும்
      காலமெலாம் களிசிறக்கும் தமிழ்சி றக்கும்.