பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

16. தமிழின வரலாறு

கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்;
மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தனவன்;
கோட்டைச் சுவரெடுத்துக் கூடும் படையமைத்து
நாட்டைப் புரந்து நலந்தந்தான்; நாளும்
குடிபழி தூற்றாது கோலோச்சி நல்ல
படியரசு செய்து பயன்தந்து பேர்கொண்டான்;
மாந்தர் உயிரானால் வேந்தர் உடலாவான்
வேந்தன் உயிரானால் மாந்தர் உடலாவார்;
ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைக் சுற்றிக் கொடிபொறித்தான்
முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்
எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்
கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்;
காட்டைத் திருத்திக் கழனி எனவாக்கி
மேட்டைச் சமமாக்கி வேளாண் தொழில் புரிந்தான்;
பாராளும் காவலர்க்கும் பாட்டாளும் பாவலர்க்கும்
ஏராளும் காராளன் செய்யுதவி ஏராளம்;
சாவா மருந்தெனினும் தன்பால் இயைந்துவிடின்
ஆ ஆ இனிதென் றவனே தனித்துண்ணான்;
மற்றோர் வெறுத்தாலும் மாறி அவரிடத்துச்
சற்றும் முனிபுகொளான் தாவி அணைத்திருப்பான்;
நெஞ்சில் உரமும் நெடுந்தோளில் வல்லமையும்