138 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
ஆசைக்குட் பட்டே அலைகின்றான் பாவிமகன்; நல்ல அரசியலில் நச்சைக் கலந்துவிட்டான்; சொல்லும் மொழியெல்லர்ம் சூதன்றி வேறில்லை; சூதாட் டரசியலில் சொக்கித் திரிபவரைச் சூதாட்டக் காயாக்கிச் சொக்கட்டான் ஆடுகிறான்; பண்பாட் டரசியலைப் பாழடித்துச் சாகடித்துத் தன்பாட்டில் மட்டும் தனியார்வம் காட்டுகிறான்; கண்டுமுதல் காணும் களமாக்கி அச்செயலைத் தொண்டென்றும் சொல்லித் தொலைக்கின்றான் மக்களிடம்; நோக்குந் துறைதோறும் நோய்செய்யும் போலிகளே தூக்கித் தலைநிமிர்த்தித் தோளுயர்த்திச் செல்கின்றார். ஏட்டில் படித்தேன் இலக்கணப் போலியென நாட்டிலும் போலிகள் நன்கு பெருகிவிட்டார்; மானம் மறந்தான் மனத்தைத் துறந்துவிட்டான் போனது போகப் பொருள்வந்தாற் போதுமென்றான்; ஒட்டும் வயிற்றில் உடுத்த உடையில்லை கட்டும் தறியில்தான் காலமெல் லாங்கிடப்பான்; சிக்கல் எடுப்பான் சீர்செய்வான் பாநூலைச் சிக்கலுக்குள் சிக்கி இவன்மட்டும் சீரழிவான்; பாவறுந்த நூலைப் பதப்படுத்தி ஒட்டிவைப்பான் வாழ்வறுந்து போனால் வழியின்றித் தான்தவிப்பான் நூற்றுக் கணக்கிலவன் நூற்றுக் கொடுத்தாலும் சோற்றுப் பருக்கைக்கு நோற்றுக் கிடப்பான்; நாட்டுப் பசிபோக்க நாற்றை நடுகின்றான் வீட்டுப் பசிநீக்க வேளாளன் சாகின்றான்; பல்லுயிரும் வாழப் பகுத்துண்டான் முன்னாளில் பல்லுயிரும் வாடப் பறித்துண்பான் இந்நாளில்; கூம்பிக் கிடக்கும் குடும்ப நிலைகண்டும் சோம்பிக் கிடந்தே சுகங்கண்டு வாழ்கின்றான்; பாவம் பழியென்று பாரான் தனதுமனம் தாவும் செயலொன்றே தக்க தெனப்புரிவான்; சின்ன நலமொன்றுசேரும் எனத்தெரிந்தால் என்ன பெரும்பழியும் ஏற்கத் தயக்கமிலான்; |