பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 143

பகுத்துணரும் ஆற்றலிலார் மயக்கங் கொண்ட
      பத்தியினால் தம்மைத்தான் அறிய கில்லார்
தொகுத்திருக்கும் மடமைக்குள் மூழ்கி நிற்பார்
      தொழும்பரிவர் குடிமக்கள்; மனுநூ லாளர்
வகுத்திருக்கும் பிறப்பிறப்பு வரிக ளோடு
      மன்றல்வரி குடிமக்கள் செலுத்தி நிற்பர்;
பகைத்தெவரும் எழுவரெனில் அழகு மிக்க
      பராசத்தி ஏவிடுவர் பகையும் வீழும்.

வஞ்சனையின் வலைவிரிக்கும்; அறிவு தேய்ந்த
      வாயில்லா அரிகளெல்லாம் வந்து வீழும்;
நஞ்சனைய தந்திரத்தால் மயக்கு கின்ற
      நாத்திறத்தால் ஏமாற்றி ஆட்சி செய்யும்
பஞ்சணைந்த அரியணையில் ஏறி நின்று
      பாமரரைப் பொம்மையென ஆட்டி வைக்கும்;
துஞ்சுமன மூடரிங்கு வாழும் மட்டும்
      தோற்காது வெற்றிபெறும் ஆரி யந்தான்.

30.3.1984