146 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
புவிபுரக்க அரசிருக்கை அமர்ந்த முன்னோர் பொலிவுமிகும் கவிபலவும் புனைந்து தந்தார்; *கவிபுரக்கும் சங்கத்தும் தலைமை ஏற்றார்; காட்டுதற்குச் சான்றுபல இன்றும் உண்டு; புவிபரக்க அரசிருக்கை இன்று கொண்டோர் புதுமைமிகும் கவிபலவும் புனைந்து தந்தார்; கவிபரப்பும் அரங்கத்தும் தலைமை ஏற்றார்; காலமெலாம் நம்மரபு நிலைத்து நிற்கும். அரசோச்சும் மன்றத்தில் அறம்உ ரைக்க அவைக்களத்துப் புலவர்பலர் இருந்தார் அந்நாள்; *அரசாட்சி மன்றத்தில் பெருமை நல்க அவைக்களத்துப் புலவரென இல்லை இந்நாள்; முரசோச்சி ஒலியெழுப்பும் முதல மைச்சே முறையோஎன் றுள்நினைந்தேன்; புலவ ரைத்தான் அரசாட்சி மன்றத்தின் தலைவ ராக அமைத்தமையால் குறைசொல்ல வழியும் இல்லை. மாரிக்கு நிகராகப் பொருளை வாரி வழங்கியருள் வள்ளல்பலர் ஆண்டார் அந்நாள்; ஊருக்கு நலஞ்செய்யும் தொண்டர் இந்நாள் ஊராள வந்தமையால் வள்ளல் அல்லர்; ஆருக்கும் ஈவதற்குச் செல்வர் அல்லர்; ஆனாலும் தமிழரசில் எளிய வர்க்குப் பாரிக்கு நிகராக வாழ்வு நல்கும் பண்பாட்டைக் காக்கின்ற பண்பும் உண்டு.
தமிழகமுதல்வர் கலைஞர் தலைமையேற்றார் சட்டமன்றத்தலைவர் புலவர் கோவிந்தன் |