148 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
முன்னாளில் தமிழ்நாடு பொதுமை யின்றி முடியரசாய்த் தனியரசாய் விளங்கக் கண்டோம்; இந்நாளில் குடியரசாய் மலர்ந்த தேனும் எடுப்பார்கைப் பிள்ளையென நிற்கக் கண்டோம்; தன்னாட்சி செய்கின்ற உரிமை யின்றித், தாவென்று நடுவரசைக் கேட்டுவாங்க அன்னார்பின் திரிகின்ற நிலையே கண்டோம்; அதிகாரம் இல்லாத அரசே பெற்றோம். நடுவரசில் அதிகாரம் குவிந்த போதும் நாகரிக அரசியலைச் சொல்லிக் காட்டிக் கொடுவரிமை என்றுரத்த குரல்கொ டுக்கும்; கூடிமகிழ் உறவுக்கும் கைகொ டுக்கும்; கெடுதலையாய்ப் போராடும் உள்ளம் இல்i; கிளந்துரைத்து வாதாடும் நெஞ்சம் உண்டு; விடுதலைக்குக் கேடுசெய்ய பகைகள் வந்தால் வீறுடனே சீறிஎழும் நாடு காக்கும். எளியரென வலியரென இன்னும் இங்கே இருக்கின்ற நிலையொழிக்கும் பணியில் நிற்கும்; துளியளவும் வன்முறையை நாட லின்றித் தோழமையால் பொதுவுடைமை பூக்கச் செய்யும்; இழிவுடைய உயர்வுடைய சாதி என்னும் இறுமாப்புக் கொள்கைகளைச் சுட்டெ ரிக்கும்; தெளிவுடைய அறிவினராய் மாந்தர் எல்லாம் திருவினராய்ச் சரிநிகராய் வாழச் செய்யும் |