புதியதொரு விதிசெய்வோம் | 149 |
யானைகட்டிப் போராடித்து விளைச்சல் கண்டு யாவருக்கும் நெல்லளந்த தமிழர் நாட்டில் பானைகட்டிப் போரடிக்க வந்த பேர்க்கும் படியரிசி யளப்பதற்கு முயலும் போது மோனைகட்டி எதுகையிட்டுக் கவிதை யாத்து முழுமனத்தாற் பாராட்ட மனமே யில்லார் சேனைகட்டி எதிர்க்கின்றார்; சிறுமை யன்றோ? செந்தமிழர் நாட்டுக்கு நன்மை யாமோ? பாரிவிழா பறம்புமலை 28.4.1969 |