150 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
20. ஒருமைப்பாடு ஒருமைப்பா டென்றொருசொல் உரைக்கக் கேட்டோம் ஒற்றுமைஎன் றொருசொல்லும் மொழியக்கேட்டோம் இருமைக்கும் உள்ளதொரு வேறு பாட்டை இனியமனம் படைத்தவர்கள் உணர்தல் வேண்டும்; ஒருமைப்பா டென்றுரைத்தால் ஒன்று வாழும் ஒற்றுமை என்றுரைத்தாலோ பலவும் வாழும் உரிமைக்குக் குரல்கொடுப்போம் பவவும் வாழ உறவுக்குக் கைகொடுப்போம் நாட்டைக் காக்க. 2.3.1975 |