பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 153

23. எங்கே தமிழன்?

தமிழனைக் காணவில்லை-ஈன்ற
தாயகம் முழுவதும் போயெதிர் தேடினும்

- தமிழனை

இமிழ்கடல் வரைப்பில் எங்கணும் சென்றான்
இசையுடன் தன் கொடி ஏற்றினன் என்றார்

- தமிழனை

இந்துவென் றொருவன் என்னெதிர் வந்தான்
இசுவாம் எனவோர் இளைஞன் சொன்னான்
வந்துமற் றொருவன் கிறித்தவன் என்றான்
வருபவர் ஒவ்வொரு வகைவகை சொன்னார்

- தமிழனை

பார்ப்பான் முதலி பஞ்சமென் செட்டி
பள்ளொடு பறையெனப் பலபேர் சுட்டி
ஆர்த்தார் இனும்பல் லாயிரங் கொட்டி
ஆதலின் என்மனம் அலைந்தது சுற்றி

- தமிழனை

3.12.1982