பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 155

25. என் குறிக்கோள்

தமிழன் எனும்பெயர் சாற்றுங் காலைக்
குமையா உரிமை கொள்ளுவன் யானே;
இந்தியன் எனும்சொல் இயம்புங் காலை
உந்திய நட்பை உணருவன் யானே;
உலகம் எனும்பெயர் ஒதுங் காலைக்
கலகமில் லன்பைக் காணுவன் யானே;
விரிமனம் எனச்சொல்லி உரிமை யிழந்து
பிறபிற நினையிற் பேதையன் யானே.

1.2.1988