பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 159

      துய்யபுனல் ஆடியதால் ஈரஞ் சொட்டத்
தொங்கிவரும் குழல் நுனியை முடித்துக் கட்டித்
      தொடுத்தெடுத்த மலர்ச்சரத்தைச் செருகி வைத்தான்

திங்கள்முகம் மிகப்பொலிய நெற்றி மீது
      திலகமிட்டு, மலர்விழியில் மையும் இட்டுத்
தக்கமென மின்னுமிழை பின்னி நெய்த
      தகதகக்கும் காஞ்சிபுரப் பட்டு டுத்துப்
பொங்கலுக்கு நல்வரவு நவில்வாள் போலப்
      புதுவகைய மாக்கோலம் இட்டு முன்றில்
எங்கணுமே மங்கலஞ்செய் தொளிர வைத்தாள்
      இடையிடையே செம்மண்ணிற் கோலஞ் செய்தாள்

வாயிலெலாம் மாவிலையால் தோர ணங்கள்
      வகைசெய்து முடிறசெய்து *நால விட்டாள்
சேயிழையாள் ஓடிவிளை யாடும் என்றன்
      சிறுமகனைப் பிடித்திழுத்துக் கொஞ்சிக் கெஞ்சி
வேயிணையும் மென்தோளில் தாங்கிச் சென்று
      வெந்நீரை இளஞ்சூட்டில் இறக்கி அந்தச்
சேயினையும் நீராட்டி அணிகள் பூட்டிச்
      செந்நிறத்துப் பட்டுடுத்தி மகிழ்ந்து நின்றாள்.

ஒப்பனைகள் மகவினுக்குச் செய்த பின்னர்
      ஒண்டொடியாள் கடைக்கண்ணால் நோக்கி நின்றாள்;
அப்பொருளை யுணர்ந்தெழுந்து புனலும் ஆடி
      அவள்தந்த புத்தாடை யுடுத்து நின்றேன்;
ஒப்பிலவள் முகமலரைத் தாளில் வைத்தே
      ஒருகொடிபோல் இடைநுடங்க வணக்கஞ் செய்தாள்
இப்பழமை எதற்கென்றேன் ‘உம்மை யன்றி
      எனக்கெனவோர் தெய்வமிலை அத்தான்’ என்றாள்.


* நாலவிட்டாள் - தொங்கவிட்டாள்