புதியதொரு விதிசெய்வோம் | 163 |
மனங்குளிர மேல்நடுகீழ் எனவு ரைக்கும் வழிமுறையால் இன்னிசையை இசைத்துப் பின்னர் *அனங்கவிழும் நடையுடையாள் பொருள்வி ளங்கா அயன்மொழியின் இசைப்பாடல் ஒன்றெ டுத்துத் தனந்தனந்தோம் தகிடவென முழங்கிக் கைகள் தாளமிடப் பாடினள்காண்; கேட்டு நெஞ்சம் சினங்கெழும முகஞ்சிவந்து கைகள் கொண்டு செவியடைத்தேன் உளந்துடித்தேன் நிறுத்து கென்றேன். நிறுத்தென்று நான் சொல்லி நிறுத்து முன்னே நின்றதவள் வாய்ப்பாட்டு; பேதைப் பெண்ணே பொறுத்திருக்கும் பண்பினுக்குத் தமிழ னைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்ட தில்லை; சுறுக்கென்று சொல்வதெனில் மானம் விட்டோர் சூடுகெட்டோர் நமைப்போல யாண்டும் இல்லை; கிறுக்கரெனத் தொழும்பரென அறிவு கெட்டுக் கீழாகிப் பாழாகித் திரிகின் றோமே! பாடுகின்ற நீதமிழ்ப்பெண் பாடல் கேட்கும் பாவியும்நான் தமிழ்மகனே; ஆனால் இங்குப் பாடுகின்ற பாமட்டும் தமிழே யில்லை; பாரெங்கும இக்கொடுமை கண்ட தில்லை; நாடுகின்ற இசையரங்கில் பிறவ ரங்கில் நன்மைமிகும் வானொலியில் கொடுமை செய்யும் வேடுவர்கள் தமிழுக்குத் தீங்கு செய்யும் வினைகாணும் பொழுதெல்லாம் நெஞ்சம் வேகும்
* அனங்கவிழும் - அன்னங்கவிழும் |