164 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
நல்லவரும் சான்றோரும் சொல்லிச் சொல்லி நாடோறுங் கதறினுமே கேட்பா ரில்லை; புல்லடிமைத் தொழில்செய்தே பழகி விட்டோம்; புரியாத மொழிகேட்டு மழுங்கி விட்டோம்; கொல்லரவு நச்சுமிழ்தல் போல நீயும் கொடுமொழியால் இசைபாடி எனைவ தைத்தாய் அல்லலுறச் செய்துவிட்டாய் பொங்கல் நன்னாள் அகமகிழ்வைக் கெடுத்துவிட்டாய் எவரை நோவேன்? பழுத்தெழுந்த சினத்தைஎலாம் கொட்டி விட்டேன்; பாவையவள் துடிதுடித்தே ‘உங்கட் கென்ன? புழுக்கலிலாப் பச்சரிசி வேண்டு மென்றேன் புழுக்களுள பச்சைநிற அரிசி தந்து முழக்குகிறீர்; உலையிட்டுப் பொங்க வைத்தால் மும்மடங்கு பொங்கிவரும் சீற்றம்’ என்றாள் முழங்கையில் தலைவைத்துத் துயி;லும் என்னை முழக்கிற்றுப் பாவைகுரல் விழித்தெ ழுந்தேன். கனவகத்தும் பெருங்கவலை; நனவ கத்தும் கரைகாணாக் கவலைகளே சூழும் வண்ணம் வினைவிளைக்கும் கொடியவரைக், கொள்ளை கொள்ள வேளைதொறும் வஞ்சகங்கள் செய்து கொண்டு தினவெடுத்துத் திரிபவரை ஒழிக்கும் நாள்தான் திருநாளாம் எனவுரைத்தேன்; அவள்ந கைத்து, “முனமெழுந்து நீராடி வருக” என்றாள்; மொய்குழலின் ஆணைதனை ஏற்றுக் கொண்டேன். அரசினர் பயிற்சிக் கல்லூரி, புதுக்கோட்டை, 21.1.1967 |