புதியதொரு விதிசெய்வோம் | 169 |
விண்வெளிப் போருக்கோ விஞ்ஞானங் கற்றனர் வேதனை நெஞ்சினில் விஞ்சுதடா-மக்கள் பண்ணிய குண்டுகள் மக்களை மாய்த்திடப் பாரதைக் கண்டு பொறுத்திடுமோ? மக்களைக் கொன்றபின் மாநிலம் ஏதடா? மாமதி யொன்றை மறந்தனரோ?-நம்மைக் கொக்கென எண்ணினர்; கொக்கரிப் போர்தமைக் கூடி யெதிர்த்தல்நம் வேலையடா! உலகிற் பிறந்தவர் ஒவ்வொரு மாந்தரும் உரிமை படைத்தவர் உண்மையிதாம்-இங்குக் கலகம் விளைத்திடின் காய்ந்து தடுத்திடக் கையை உயர்த்துதல் வேண்டுமடா உண்மையிற் போர்வெறி ஓட்டிட யாவரும் ஒன்று திரளுதல் வேண்டுமடா-இந்த எண்ணம் மிகுந்தவர் எம்மவர்தோழரென் றெண்ணி நடந்திட வேண்டுமடா, 20-5-1987 |