பகைவருமேல் அதை எதிர்த்து வாகை சூடிப் பரம்பரையின் பெருமிதத்தைக் காட்டல் வேண்டும்; நகைமுகத்த தீநட்பு நெருங்கி நின்றால் நம்மையது நெருங்காத விழிப்பு வேண்டும்; அகப்பகையும் புறப்பகையும் நுழையா வண்ணம் ஆய்ந்துணர்ந்தே அவைதவிர்க்கும் ஆற்றல் வேண்டும்; தகுமுறையில் இவ்வண்ணம் நாமி ருப்பின் தமிழ்வாழும் தழைத்தோங்கும் தலைமை தாங்கும். |