பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்17

பகைவருமேல் அதை எதிர்த்து வாகை சூடிப்
      பரம்பரையின் பெருமிதத்தைக் காட்டல் வேண்டும்;
நகைமுகத்த தீநட்பு நெருங்கி நின்றால்
      நம்மையது நெருங்காத விழிப்பு வேண்டும்;
அகப்பகையும் புறப்பகையும் நுழையா வண்ணம்
      ஆய்ந்துணர்ந்தே அவைதவிர்க்கும் ஆற்றல் வேண்டும்;
தகுமுறையில் இவ்வண்ணம் நாமி ருப்பின்
      தமிழ்வாழும் தழைத்தோங்கும் தலைமை தாங்கும்.