174 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
சாதிக்கு நீகொடுத்த சாட்டையடி போதாதோ? தமிழர் இன்னும் மேரிதிக்கொண்ட டழிகின்றார்; முற்போக்குப் பாதைசெல முயல வில்i; *மேதித்தோல் போர்த்தவுடல் மேதியினிற் பெற்றனரோ? மேடை யேறிப் போதிக்க மட்டுமவர் மறப்பதில்லை பாழாகிப் போன மாந்தர். எவன்விட்டான் சாதியினை? எவன் செய்தான் கலப்புமணம்? எவனோ எங்கோ தவறிவிட்டான் செய்துவிட்டான் தவிக்கின்றான்; மற்றவனோ சாதி தன்னைச் சுவர்வைத்துக் காக்கின்றான் சொல்வீரங் காட்டுகிறான் துணிய வில்லை; இவன்கெட்ட கேட்டுக்கு நூற்றாண்டு விழாவெடுக்க எழுந்தும் விட்டான். பாவேந்தர் நூற்றாண்டு விழாவுக்குப் பாடியது
* மேதி - எருமை |