184 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
பிழைப்பதிலே சிலர்க்கின்பம்; பொய்ம்மை பேசிப் பிறர்நலத்தில் அழுக்குற்றுப் புறுமுங் கூறிச் செழிப்பதிலே சிலர்க்கின்பம்; வறுமைப் போதும் செம்மைநெறி குன்றாமை சிலருக் கின்பம். பாடுபட்டுப் பெற்றோர்கள் கல்விக் காகப் பணமனுப்பச் செலவழித்துக் கூடிப் பாடிக் கூடுவிட்ட பறவைஎன ஒடி ஆடிக் கோலங்கள் பலசெய்து, வாங்கி வைத்த ஏடுதொட்டுப் பாராமல், கண்வி ழித்தே எக்களித்துத் திரிவதிலே சிலருக் கின்பம்; நாடுகெட்ட நிலையுணர்ந்து, தமைநி னைந்து நடப்பதற்கு முயல்வதுதான் நிலைத்த இன்பம் நமதுதொழில் பயில்வதெனக் கடமை எண்ணி நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம்வி ளைக்க உமதறிவு, செயல், நினைவை ஆக்கல் வேண்டும்; உலகும்மைத் தக்கவரென் றுரைக்கும் வண்ணம் நுமதுடைமை கண்ணியமென் றெண்ணி எண்ணி நொடிப்பொழுதும் வழுவாமல் ஒழுகல் வேண்டும்; குமையாமல் சிதையாமல் கட்டுப் பாடும் கொண்டவராய் விளங்குவிரேல் இன்பந் தோன்றும். தொடங்குங்கால் துன்பமெனத் தோன்று மேனும் துளங்காமல் தொடர்ந்திருந்து முயல்வீ ராயின் மடங்கொன்று பேரறிவு வளரக் காண்பீர்; மட்டில்லா இன்பநிலை தொடரக் காண்பீர்; முடங்கியுள நம்நாடு நாளை உங்கள் முகங்களைத்தாம் எதிர்நோக்கும்; அதனால் நெஞ்சில் திடங்கொள்க பயின்றிடுக வெற்றி கொள்க திருநாட்டில் நல்லாட்சி மலரச் செய்க. கருத்தராவுத்தர் கல்லூரி உத்தம பாளையம் 27.1.1967 |