பக்கம் எண் :

186கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

சதையைவளர்த்தீர்மதியைவளர்திலீர்
மட்டிகள்போலினும்வாழ்வீர்”என்றெலாம்
குட்டிஎழுப்பினார்கூர்மதிப்பெரியார்
“சிறுநரிக்கூட்டம்சிங்கக்காட்டில்
உரிமையிற்செங்கோல்ஓச்சுதல்முறையா?
*தரியலர்நுழைவால்தமிழகம்தாழ்ந்திடல்
சரியிலைஇனிமேல்தமிழா!தலைநிமிர்!
உலகம்வியந்திடஉயரியபண்புகள்
பலபலகண்டதுபண்டைத்தமிழகம்
அந்தத்தமிழகம்அடிமையில்வீழின்
இந்தப்புல்லுயிர்இருந்துதான்என்பயன்?
ஒருமுறைபோகுமிவ்வுயிரைநாட்டின்
உரிமையைக்காத்திடஉவப்புடன்ஈவோம்;
கீழைத்திசையில்கிளர்கதிர்விரித்துக்
காலைச்சுடரொளிக்கதிரோன்எழுந்தனன்
விழித்தனபுள்ளினம்விரித்தனசிறகுகள்
கொழித்திடும்அலைப்புனற்குளந்தொறும்குலவிடும்
தாமரைப்பூக்கள்தம்முகம்மலர்ந்தன;
காமலர்க்கொடிகள்கண்மலர்ந்தசைந்தன;
அஞ்சிறைத்தும்பிசெஞ்சுவைக்கொழுந்தேன்
கொஞ்சிக்கொஞ்சிக்குடித்துச்சுவைத்துப்
பாணர்யாழெனப்பாடிப்பறந்தன;
யாணர்ப்புத்துணர்வுயாண்டும்விரிந்தன;
ஆவினம்மாவினம்அன்புப்பெருக்கால்
தாவினமாங்குயில்கூவினயாங்கும்;
நீயோஇன்னும்நீள்துயில்கொண்டனை;
*பாயாவேங்கையின்நின்றிடல்பண்போ?
விழிஎழுசிறகைவிரிபறஉன்னினப்


* தரியலர் - பகைவர்
* பாயா வேங்கையின் - வேங்கைமரம் போல்