பக்கம் எண் :

188கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

குளிர்புனற்பொய்கையுள்குளித்தெழுந்ததுபோல்
ஒளிபடர்கதிரெனஉய்ந்திவண்வந்தும்,
மாற்றலர்பகழிகள்மார்பினிற்பாய
ஏற்றவைதாங்கிஇமையாவிழியொடு
போர்புரிமறவன்போலெதிர்நின்று
நேர்வருபழிகளைநெஞ்சினில்தாங்கியும்,
அறிதுயில்கொள்வோர்உரிமையைஉணர்ந்திட
முரசொலிஎழுப்பிமுழக்கினார்கலைஞர்;
“ஈங்கென்னவேலைஇந்திமொழிக்குத்
தூங்கினர்தமிழர்எனவோதுணிந்தனர்?
முத்தமிழ்காக்கமுனைந்தெழுதமிழா!
எத்தனைப்படைகள்இங்கேவரினும்
அத்தனையுந்தூள்ஆக்குகநீக்குக
கொடியோர்செயலறக்கொலைவாள்எடடா!
இடியேறெனநீஏறுபோல்நடடா!
கொதித்தெழும்உனையிடுங்கொடுஞ்சிறைச்சாலை
மதித்துளம்மகிழ்ந்திடும்மாங்குயிற்சோலை;
தமிழரின்மேன்மையைத்தாழ்த்திடக்கருதும்
திமிரினைநொறுக்கித்தீயினிற்கொளுத்து
கூடார்உனக்குக்கோடிதரினும்
நாடேன்என்றுசொல்நாய்போல்அலையேல்
தமிழரின்மானமும்தமிழரின்வீரமும்
நமதிருவிழிகள்நண்ணியஇமைநீ;
தமிழ்மொழிஆய்ந்ததமிழ்மகன்ஒருவனே
தமிழ்நாடாளத்தகுதியுடையவன்;
*என்புகள்இடுவார்எவரோஅவர்பால்
அன்பினைக்காட்டிஅலையும்விலங்கெனக்


* என்புகள் - எலும்புகள்