பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 189

கும்பிவளர்க்குங்குறிக்கோள்ஒன்றே
நம்பிவாழேல்;நாடேகுறிக்கோள்”
என்றுபாவேந்தர்எழுப்பினர்பாடி
இன்றும்பற்பலர்இங்கேஉள்ளனர்;
இராமன்கதையைஇயம்பினன்கம்பன்
பராவினர்தமிழர்பரவிய தவன்கதை;
ஆரியன்உயர்ந்தவன்திராவிடன்தாழ்ந்தவன்
எனுமொருகருத்தைஎங்கும்பரப்பினர்;
இனவுணர்வுடையார்இதனைப்பொறாது
திராவிடர்பெருமையைத்தெள்ளிதின்உணர்த்த
இராவணகாவியம்இயற்றிக்காட்டி
இனவுணர்வூட்டஎழுதுககாவியம்
எனவுணர்வூட்டிஎழுப்பினர்குழந்தை;
பணியையிழப்பினும்பதவியிழப்பினும்
அணிபெறுந்தமிழின்ஆக்கமேஇலக்கெனப்
போர்புரிமறவர்புலமிகும்இலக்குவர்
யாருரைதரினும்நேரியதன்றெனின்
சீறிஎழுவார்;சிறிதும்அஞ்சார்;
சீரியநாட்டில்ஆரியஇந்தி
மீறிவருங்கால்வெகுண்டெழுந்தார்த்துப்
புலவர்படையைத்திரட்டிப்போர்க்குரல்
குலவிடமுழக்கினர்அலறியதரசும்
உளநாள்முழுதும்உயர்தமிழ்காக்கும்
களமேகண்டவர்காட்டியநெறிபல;
அன்பின்உருவம்அமைதியின்தோற்றம்,
பண்பின்உறைவிடம்பகையிலாநெஞ்சம்
கொண்டவர்செம்பொருள்கண்டவர்அவரைத்
தண்டமிழ்நாட்டார்தமிழ்ப்பெரியாரெனக்
கொண்டுளம்மகிழும்கொள்கைச்சான்றோர்;
தொழிலோர்இயக்கம்தூயதமிழில்