பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

எழுதியும்பேசியும்இயக்கியதலைவர்;
அரசியல்விளக்கம்அன்னைத்தமிழில்
உரைசெயஇயலாதென்றவர்*உட்க
அழகியதமிழில்எழுதியதமிழர்;
பழகிடநல்லவர்பைந்தமிழ்வல்லவர்
உலகஒற்றுமைஉள்ளக்கிடக்கை
ஆயினும்தம்மைஈன்றதோர்அன்னைத்
தென்தமிழ்நாட்டைச்சிறிதும்மறந்திலர்;
இந்திபுகுந்திடஎண்ணியகாலை
நொந்துளங்கனன்றுநுவன்றநல்லுரை
பொன்னிற்பொறித்துப்போற்றுந்தகையன;
நன்னர்நெஞ்சால்நாடி,இளைஞரை
‘எழுகஎழுக’என்றெழுச்சிகள் கூறித்
‘தொழுகதொழுகதூய்தமிழ்அணங்கை
நாளையஉலகைநடத்தும்பொறுப்பு
காளையர்நுமதுகடமை’என்றுரைத்துத்
தட்டித்தட்டிஎழுப்பியதலைவர்
சுட்டிச்சுட்டிச்சொன்னவைபலப்பல
“உயர்தனிச்செம்மொழிஉமதுதாய்மொழி
அயன்மொழிச்சொற்கள்அதனிடைக்கலத்தல்
மொழியின்தூய்மைஅழியும்வழியாம்,
பழியிதுதவிர்க,பைந்தமிழ்பேணுக,
தமிழ்மகள்மேனியில்தழும்புகள்செய்யத்
தமிழர்முனைவதுதகுதி யன்றாம்;
நஞ்சின்*கலப்பால்நல்லதோர்கலப்பால்
துஞ்சும்நிலையினைத்தோற்றுவித்தழிக்கும்;
ஆரியம்கலந்தால்அன்னைத்தமிழின்
சீரியல்அழியும்செம்மையும்மறையும்
பிறமொழிக்கலப்பினைப்பேணாதகற்றுக;


* உட்க - வெட்கித் தலைகுனிய
* கலப்பால் - கலம் + பால்