தத்தமது நாகரிகம் மொழிகள் பண்பு தனித்தன்மை எள்ளளவும் கெடுத லின்றி ஒத்துரிமை உணர்வுடனே மாநி லங்கள் உளமொன்றி வாழ்வதுதான் நமது வேட்கை; பித்தரென வெறியரென ஒருமை என்ற பெயர்சொல்லி இந்தியினால் தைத்து விட்டால் எத்தனைநாள் ஒட்டிருக்கும்? குனிந்த மாந்தர் இருதோளும் விரித்தெழுந்தால் தெறித்துப் போகும். உறவுக்குக் கைகொடுப்போம் எனினும் எங்கள் உரிமைக்கும் குரல்கொடுப்போம்; தென்பு லத்தின் மறுதிக்கில் வாழ்வோர்கள் குரலைக் கேட்க மறுத்துவிடின் உயிர்கொடுப்போம்; சிறையில் மாண்ட திறமிக்க நடராசன் தால முத்து தென்னாட்டில் பலருள்ளார்; இன்று வாழ்வோர் உரிமைக்கே உயிர்கொடுப்போம் என்பர் நாளை உணர்வுடையார் என்சொல்வார்? யாரே கண்டார். |