12. செல்லடி செல்லடி இந்திப் பெண்ணே நில்லடி நில்லடி இந்திப்பெண்ணெ - உன் நெஞ்சினில் என்ன துணிச்சலடி! சொல்லடி சொல்லடி இந்திப்பெண்ணே - உன் சூடு சுரணைகள் அற்றனவோ! மூன்று முறையிங்கு வந்தனையே - நீ மூக்கறு பட்டுமே சென்றனையே! ஏன்தமிழ் நாட்டினை நாடுகிறாய்? - பின் ஏனடி பட்டதும் ஓடுகிறாய்? சான்றவர் சொல்லையும் மீறுகிறாய் - படி தாண்டிப் பிறர்மனை ஏறுகிறாய் ஈன்றவர் கண்ணெதிர் நாறுகிறாய் - உனை ஏற்பவர் யாரெனத் தேடுகிறாய் ஏற்பவர் தோள்களைத் தொற்றிடடி - மனம் ஈபவர் கால்களைச் சுற்றிடடி மேற்படி வேலையைக் கற்றிடடி - எம் மீதினில் ஆசையை விட்டிடடி மாட்சிமை ஏதொன்றுங் கற்றிலைநீ - நல் மானமும் தோற்றமும் உற்றிலைநீ ஆட்சியில் நற்றிறம் கற்றிலை நீ - ஓர் ஆணவம் மட்டுமே பெற்றனைநீ |