32 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
நாட்டினில் ஒற்றுமை நாடுகிறோம் - அதை நாளும் நினைந்திங்குப் பாடுகிறோம் நாட்டைப் பிளந்திட நாடுகிறாய் - அது நன்மை எனத்திட்டம் போடுகிறாய்! போவென வாயிலை மூடுகிறோம் - வரப் பொந்துள தோவென நாடுகிறாய் சாவென்ற போதிலும் நாடவிடோம் - எம் சந்ததி யின்மனம் வாடவிடோம் நில்லடி நில்லடி இந்திப்பெண்ணே - உன் நெஞ்சினில் என்ன துணிச்சலடி! செல்லடி செல்லடி இந்திப்பெண்ணே - இதைச் சிந்தையில் வைத்திரு சென்றபின்னே. 20.2.1979 |