பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்33

13. ஒன்றே நினைப்பீர்!

பேசுங் கலையாவும் பேணிவந்த முன்னவன், தான்
பேசும் மொழிக்குப் பெருமை தரும்வகையில்
எண்ணும் எழுத்தும் இயற்றி நமக்களித்தான்
கண்ணென் றவைதம்மைக் காத்து வளர்த்தோமா?
கீழ்வா யிலக்கம் கிழடாகிப் போனதென்று
தாழ்வாக நாமதனைத் தள்ளிக் கிடத்திவிட்டோம்;
மிஞ்சும் எழுத்தேனும் விஞ்சுமா என்றாலோ
அஞ்சும் நிலைக்குத்தான் ஆளாகி நிற்கின்றோம்;
நாடாளும் நல்லோர் நடந்துவரும் போக்குத்தான்
கேடாகும் என்று கிறுகிறுத்து வாடுகின்றோம்;
நாட்டில் ஒருமைதனை நாட்ட நினைவோர்தாம்
கேட்டில்விளை யாடக் கிளர்ந்தெழுந்தால் என்செய்வோம்!
`உங்கள் எழுத்தை ஒதுக்கிவிட்டு மேற்கோட்டில்
தொங்கும் எழுத்தைத் துணைக்கொள்; ஒற்றுமையைக்
கண்டு விடலாம்' எனத்தான் கதறுகின்றார்;
துண்டு படத்தான் துணைசெய்யும் இக்கதறல்;
ஆள்வோர் கருத்தும் அதுவாயின் ஆகட்டும்!
வீழ்வோர்தாம் வீழட்டும்! வாழ்வோர்தாம் வாழட்டும்!
தாய்மொழியின் ஆக்கந் தடையுறுதல் நாம்காணின்
காய்மொழிகள் வேண்டா கனிமொழிகள் சொல்லிடுவோம்
கேட்டால் நிலைவாழும் கேளாரேல்...? நான்சொன்னால்
பாட்டின் தரங்குறையும் பார்த்து முடிவுசெய்க!
கட்சி சமையம் கடந்துதமிழ்த் தொண்டுசெய