பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்51

ஆகாச வாணிக்குக் கால்க ளான
      அரியதமிழ் வானொலியைத் திருப்பி விட்டால்
வேகாத மொழிகளிலே எழுதி வைத்த
      விளங்காத பாடல்களே செவியில் வீழும்;
சாகாமல் இருக்கிறதே எனும்நி னைப்பில்
      தமிழிசைக்குச் சிறுபொழுதை ஒதுக்கி வைக்கும்;
நோகாமல் முறையிட்டோம் பயனே இல்லை;
      நொறுக்குகிற நாளொன்று வந்தே தீரும்!

`பொறுக்கும் வரை பொறுத்திருந்தோம் பொறுத்த நம்மைப்
      புழுவென்று கருதுகின்றார்; குனிந்து கொண்டே
இருக்கும்வரை ஏறுபவர் ஏறிப் பார்ப்பர்;
      இளைஞர்படை நிமிர்ந்தெழுந்து வீறு கொண்டால்
தருக்குடையார் தலையுருளும் உடல்கள் சாயும்
      தன்மானப் போர்முரசம் முழங்கும்' என்று
வெறுப்படைந்தோர் எழுச்சிகொளா முன்னர் இங்கே
      விடுதலையைத் தமிழ்நாட்டிற் பரவச் செய்வீர்.

29.9.1979