பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

26. தாய்மொழிப்பற்று

கன்னட மாநிலங் காணும் ஆவலால்
என்னொடு சிலர்வர ஏகினேன்; ஆங்குப்
பிருந்தா வனத்தின் பேரெழில் விழிக்கு
விருந்தா கியது வியந்து மகிழ்ந்தேன்;
கைத்திறம் வல்லார் கண்கவர் ஓவிய
மெய்த்திறம் காட்டி வைத்தநற் கூடம்,
வண்ணக் குலமலர் வகைவகை பூத்துத்
தண்ணென் றெழிலுடன் தலைநிமிர் பூங்கா,
மடங்கல் உலவும் மரஞ்செறி காவுடன்
நடங்கொள் மயில்திரி நலங்கெழு சோலை
அடங்கலும் நோக்கி அகமிக மலர்ந்தேன்;
இடம்படுந் தலைநகர் ஏற்றங் காண
நகர்வலம் வந்தேன் நாற்புறத் தெழிலும்
பகர்தல் அரிதே; பார்த்துக் களித்தேன்;
அருகில் ஓரிசை யரங்கு நிகழ்ந்தது;
உருகும் இசையால் உள்ளம் நெகிழ்ந்தது
பொருள்விளங் காமற் போனது பாட்டு;
மயங்குமவ் வேளை மற்றொரு பாடல்
வியந்திட இசைத்தது விளங்கியது பொருளும்
வெள்ளிப் பனிமலை மீதுலவு வோமெனும்
தெள்ளிய பாடல் தேனென இனித்தது;
கற்கள் விழுந்தன கலகம் விளைந்தது
பற்பல விளக்குகள் பரவிச் சிதறின;
இசையும் நின்றது; ஏனென வினவினேன்;