`இசைவலார் பிறமொழிப் பாடல் இசைத்தலாற் சினந்தெழு வோரிது செய்தனர்' என்றனர்; இனைந்துளம் வெதும்பி மொழிவெறி யென்றேன்; தடித்த கையை மடக்கிஎன் முகத்திற் கொடுத்தனர் குத்து, குருதி வழியச் சிதறின பற்கள்; திடுக்கிட் டெழுந்தேன் உதடுகள் பற்கள் உருக்கெடா திருந்தன; தாய்மொழிப் பற்றின் தகைமை உணர்ந்து வாயிதழ் அசைந்தன வாழிய எனவே. 13.5.1987 |