56 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
27. உறங்குந் தமிழ்மகன் தமிழன் போலத் தன்னுயர் மானம் உமிழ்ந்தான் ஒருவற் காண்கிலம் உலகில்; தன்னினம் தன்மொழி தாழ்வுறல் கண்டும் உன்னுதல் செய்யா துறங்குவன் நெடிதே! தந்தை தொகுத்ததே தனக்குரி மைப்பொருள் என்றதை ஓம்பிடல் ஒன்றே குறியுளன்; முந்தையர் தொகுத்த முத்தமிழ்ச் செல்வம் வெந்தழல் வீழினும் வெறுமனே இருப்பன்; உரிமை தனக்கும் உண்டெனக் கருதாப் பெருமை யுடையன் பெயரால் தமிழன்! தன்மொழி தாழ்வுறின் தன்னுயர் மானம் புன்மை யுற்றதென் றெண்ணுதல் செய்யான்; கடவுள் வழிபடப் புகுவோன் கால்கழி நடையன் மீதே நாட்டம் வைப்பன் கடவுளின் மேம்படக் காலணி கருதுவோன் இடமுடைக் கோவிலுள் ஈடிலாத் தாய்மொழி இகழ்வுறல் கண்டும் கவலா திருப்பன்; உயர்தனிச் செம்மொழிஎன் றோதிடும் மொழியில் அயன்மொழிச் சொல்லும் ஆங்கில எழுத்தும் பெயவிழை வோரிவண் பேசினர் எழுதினர் மயலுறு தமிழனும் மயங்கினன் ஒப்பினன்; உறங்குந் தமிழ்மகன் உணர்ச்சிதான் என்னே! அரங்கம் ஏறி ஆர்ப்பொலி எழுப்பிசைச் |