பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

தாய்மொழியை வளர்ப்பதிலே கட்சிப் பூசல்
      தலைகாட்டல் கூடாது; தமிழர் யார்க்கும்
தாய்மொழியை வளர்ப்பதிலே உரிமை யுண்டு;
      தந்தம்மால் இயலும்வரை முயல வேண்டும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சாதி வேண்டா
      சாதியினைப் புகுத்துவது சதியே யாகும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சமயம் வேண்டா
      சமயம்வரின் மொழியழியுஞ் சமயந் தோன்றும்.

(விரைவு வண்டி என்று மாற்றி அமைத்ததை விறகு வண்டி என முன்னாள் அமைச்சர் ஒருவர் எள்ளி நகையாடியதைக் கடிந்து பாடியது)