60 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
தாய்மொழியை வளர்ப்பதிலே கட்சிப் பூசல் தலைகாட்டல் கூடாது; தமிழர் யார்க்கும் தாய்மொழியை வளர்ப்பதிலே உரிமை யுண்டு; தந்தம்மால் இயலும்வரை முயல வேண்டும்; தாய்மொழியை வளர்ப்பதிலே சாதி வேண்டா சாதியினைப் புகுத்துவது சதியே யாகும்; தாய்மொழியை வளர்ப்பதிலே சமயம் வேண்டா சமயம்வரின் மொழியழியுஞ் சமயந் தோன்றும். (விரைவு வண்டி என்று மாற்றி அமைத்ததை விறகு வண்டி என முன்னாள் அமைச்சர் ஒருவர் எள்ளி நகையாடியதைக் கடிந்து பாடியது) |