32. சமயத்தில் நட்டதமிழ் அருளப்பன் என்னும் பேரான் அப்துல்லா வானான் கண்டாய்! கருப்பணன் என்பான் இங்கே கபூரென ஆகி விட்டான்; விருப்புள பொன்னன் கூட விஜயனாய் மாறி விட்டான்; வெறுப்புற ஜெகந்நாத் தானான் வெள்ளையன் அந்தோ அந்தோ! செல்லப்பன் இயல்பு மாறி ஜீவபந்த் தாகி விட்டான்; நல்லப்பன் கெட்டே போனான் நண்ணினான் ஸ்ரீபா லாக; சொல்லுக்கோர் அழகன் இங்கே சொக்கினான் ஜோசப் பானான்; அல்லலுக் காளாய் நின்றான் அந்தோணி யானான் மெய்யர். தைத்திங்கள் பிறக்கும் நாளைத் தமிழ்மகன் சங்கி ராந்தி வைத்திங்குக் கூவி நின்றான்; வளரிளஞ் சிறுவ ரெல்லாம் மொய்த்திங்குக் கூடி ஆட முயல்மகார்நோன்பை கூடக் கைத்ததென் றொதுக்கி விட்டான் கழறினான் தசரா என்றே. |