72 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
35. எது கவிதை? ஒருத்தியும் ஒருவனும் உள்ளத் தெழுந்த பருவ உணர்ச்சி பக்குவம் பெற்றுக் கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா உறுப்பும் அமைந்து வனப்புடன் ஒருமலர் வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான் இந்த வுலகம் குழந்தையென் றியம்பும்; கற்பனை வளமும் கவிஞன் உளமும் பொற்புடன் மருவப் புதியதோர் உணர்ச்சி கருக்கொளும் பின்னர் உருக்கொளும்; எல்லா உறுப்புடன்அமைந்து வனப்புடன் நறுமலர் வந்து தோன்றும்; வாய்த்த அதைத்தான் இந்த வுலகம் கவிதையென் றியம்பும்; உறுப்புகள் இல்லா உருவினை வெறுக்கும் பிண்டமென் றிசைக்குமிவ் வுலகே. 27.11.1980 |