78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
40. பட்டஞ் சூட்டுக! பல்கலைக் கழகம் பயிற்றிடும் மொழிகளுள் தொல்தமிழ் ஒன்று; தூய்தமிழ் விழைந்தோர் ஈரிரண் டாண்டுகள் இலக்கண இலக்கியப் போரினுள் மூழ்கித் தேறினர் வென்றனர்; வென்றவர் தம்மை வித்துவான் என்றனர்; அன்றது சிறப்பென அயர்ந்தனர் நம்மவர்; உரிமையின் பின்னர் அரியணை ஏறிய பெரியவர் துணையால் பெயர்பிறி தாயது; சொற்றமிழ் பயின்றோர் சூடிய பிறமொழிப் பட்டயம் போயது பைந்தமிழ் ஆயது; புலவர் எனும்பெயர் பூத்தது மலர்ந்தது குலவிய மகிழ்வால்கூறினம் நன்றி; பெயராற் புதுமை பெற்றதே ஆயினும் உயர்வால் மதிப்பால் ஒன்றும் பயனிலை; பட்டயம் எனவே பகர்ந்தனர் அதனைப் பட்டம் எனச்சொலப் பதைத்தனர் தமிழர்; ஆங்கிலம் பயின்றவர்க் கடிமைப் புத்தி நீங்கிய பாடிலை நெடுநாட் பிணியது; கழகம் அரியணை கண்ட பின்னரும் இழிநிலை தமிழுக் கிருத்தலும் முறையோ? தமிழால் வென்றது தமிழால் உயர்ந்தது தமிழை வளர்ப்பது தமிழை மதிப்பது கழகம் என்றெலாம் கழறுவர் அதனால் |