43. இளங்கோவடிகள் கோவேந்தர் பெருங்குடியிற் பிறந்தும் நாட்டுக் குடிமக்கள் காப்பியத்தைப் படைத்துத் தந்தான்; மூவேந்தர் ஒற்றுமைக்கு வழியுங் கண்டான்; முதலினமாம் தமிழினத்தின் வரலாற் றுக்கு நாவேந்தும் புகழ்சேர்த்தான் சேர நாட்டு நற்றமிழன்; பெண்ணினத்தின் பெருமை சொன்ன பாவேந்தன்; தேனூற்றி வைத்த தைப்போல் பாநூற்றும் தான்நோற்றும் பெருமை கொண்டான். சேவடியின் சிலம்பணியால் விளைந்து வந்த சிலம்படியால் கற்பணங்கின் வரலாற் றுக்கோர் கோவிலினைக் கட்டியவன்; அரசு வேண்டாக் கோவடிகள்; முத்தமிழின் காப்பி யத்தால் மூவரசர் வரலாறும் மொழிந்த மேலோன் மொய்த்தபுகழ் எம்மவர்க்குத் தந்த நல்லோன்; நாவரிசை பாவரிசை காட்டி எங்கள் நற்றமிழ்க்குச் சுவைமிகுத்தான் வாழ்க நன்றே. |