114 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
2 தமிழினத்தின் தனித்தலைவர் தொண்டொன்றே வாழ்வின் தொழிலாக நாளெல்லாம் கொண்டிலங்கும் நம்பெரியார் கோலம் வடித்தெடுத்தே வண்டலுக்குப் பேர்பெற்று வாழ்வுதரும் தஞ்சைமண்ணில் அன்றெடுத்தார் ஓர்சிலைதான் அந்நாள் கவியரங்கில் நாட்டுக் குழைத்துவரும் நம்மினத்துக் காவலர்க்குப் பாட்டெழுத வேண்டிப் பணித்திருந்தார் வீரமணி; நன்றிக் கடன் செலுத்த நல்லதொரு வாய்ப்பிதுவாம் என்றுநான் எண்ணி இசைவும் அளித்துவிட்டேன்; சூழ்நிலையால் பாமாலை சூட்ட இயலாமல் ஆழ்துயரம் கவ்வியதால் அன்றுமுதல் நொந்திருந்தேன்; அந்த மனத்துயரம் ஆறும் படியாக இந்தநிலை வாய்த்ததென எண்ணி மகிழ்கின்றேன்; அன்றுதஞ்சை மண்ணில் அவர்க்குச் சிலையெடுத்தார் இன்றுதிண்டுக் கல்லில் எடுத்தார் சிலையொன்று; பாமலர்கள் சூட்டப் பணித்தமையால் இவ்வரங்கில் நாமகிழ நெஞ்சம் நனிமகிழப் பாடுகின்றேன் என்தந்தை தோன்றிய ஊர் இவ்வூரே; அவ்வூரில் முன்வந்த எம்மினத்தின் மூத்ததிருத் தந்தையை நான் பாடுகின்ற பேறடைந்தேன்; பாவலர்கள் சொன்மலர்ள் சூடுகின்ற தாள்மலரைச் சூடுகிறேன் என்தலையில்; பற்றிப் படர்ந்திருந்து பாழ்செய்யும் ஆரியத்தைச் சுற்றித் தொலைப்பதற்குச் சூறா வளியாகி வேரெல்லாம் பேர்த்தெறிய வேகப் புயலாகி ஊரெல்லாம் நாடெல்லாம் ஓடி வரும்நாளில் |