118 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
பாட்டனன்றோ? ஆற்றலெலாம் பாடி முடிவதுவோ? ஒப்பரிய நற்றலைவர் ஆனாலும் ஓர்பொழுதும் தற்செருக்குக் காட்டாத் தலைவர் அப் பண்பால் எளிமைத் தலைவர்; எவரிடத்தும் இன்சொல் மொழியுந் தலைவர்; முழுமைபெறும் நம்தலைவர்; தள்ளாட்டம் உற்றும் தடுமாற்றம் இல்லாமல் சொல்லாட வல்லஒரு சோர்வில்லாப் பேச்சாளர்; பல்லெல்லாம் வீழ்ந்தும் பகுத்தறிவைப் பாய்ச்சுகின்ற சொல்லெல்லாந் தித்திக்கும் சூடுங் குறையாது; கிண்டல் நிறைந்திருக்கும் கேலி மிகுந்திருக்கும்; கிண்டி அறிவைக் கிளர்ச்சி கொளச்செய்யும்; சிந்தித்துக் கண்ட சிறப்புமிகும் தங்கருத்தை எந்தச் சமயத்தும் எங்குந் துணிந்துரைக்கும் அஞ்சாத நெஞ்சத்தை ஆரிடத்துங் கண்டதில்லை; துஞ்சாத சிங்கத் துணிவுமிகப் பெற்றார். நமது தலைமுறையில் நாம்பெற்ற பேற்றால் இமயப் புகழ்கொண்ட ஈடில் தலைவர் நமக்குக் கிடைத்துள்ளார்; நாளும் உழைத்தே நமக்குற்ற தாழ்வை நசுக்கித் தொலைத்துவிட்டார்; நாமும் தமிழரென நாடாளும் மாந்தரென *ஏமம் மிகக்கொண் டினிதிங்கு வாழ்கின்றோம்; பெற்றதொரு நல்வாழ்வைப் பேணி மிகக்காத்து நற்றமிழர் என்றுரைக்க நாம்வாழ்வோம் என்றுசொலித் தந்தை பெரியாரின் தாள்வணங்கி வாழ்த்துரைத்துச் சிந்தை மகிழ்ந்திருப்போம் சிந்தனையைப் பேணிடுவோம் என்றுநான் சொல்லி இருகை குவிக்கின்றேன் மன்றிலுளார் வாழ்க மகிழ்ந்து. பெரியார் சிலை திறப்பு விழா திண்டுக்கல் 17.9.1970
*.ஏமம் - இன்பம் |