130 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
5 இயற்கைப் பெரியார் அடித்தளத்தில் சிந்தனைகள் கனிவ ளம்போல் அடர்ந்தடர்ந்து படர்ந்திருக்கும்; தோண்டத்தோண்ட வெடித்தெழும்பும் அறிவெனும்நீர்; அறியா மாந்தர் விளைக்கின்ற தீமைகளைத் தாங்கிக் கொள்ளும்; பிடித்துழுது பிளப்பதுபோல் துயர்தந் தாலும் பெரும்பயனே நல்குமிவை; நிலத்தின் பாங்கு; படித்தறியா அடிமைகளாய்க் கிடந்தார் உய்யப் பாடுபட்ட பெரியாரும் நிலமே போல்வார். ஆரியமாம் பாறையெலாம் சிதறி வீழ ஆர்ப்பரித்துப் பாய்கின்ற அருவி நீராம்; பாரிலுளார் தாகத்தைத் தீர்த்து வைக்கும் பகுத்தறிவு சுரந்துவரும் ஊற்றின் நீராம்; சோறுதர வளப்படுத்த ஊர்கள் தோறும் சுற்றிவரும் வற்றாத ஆற்றின் நீராம்; பேரறிவுச் சிந்தனையின் ஆழங் காணாப் பெருங்கடலின் நீரெனவும் பெரியார் ஆனார் வேண்டாத குப்பைகளை அழிப்ப தற்கு வேண்டுவதும் நெருப்பேயாம்; இருட்டைப் போக்கத் தூண்டுவதும் நெருப்பேயாம்; அரிசி தன்னைச் சோறாக்க உதவுவதும் நெருப்பே யாகும்; |