142 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
கற்பனைக் கோட்டைக்குள் சாமி - பொய்கள் கட்டிக் கதைக்கப் படித்தஆ சாமி விற்பனைப் பாட்டுக்குள் பூமி-கெட்டு வீழாமற் காத்தவர் ஈ.வே.ரா.சாமி - போராட்டக் வேத புராணங்கள் கோடி - மக்கள் வீரத்தை மானத்தை மூடினர் பாடி யாதென்று காரணம் நாடி - வீரம் யாவையும் மீட்டவர் வெண்ணிறத் தாடி - போராட்டக் ஏடாண்ட பொய்யைப் படித்து-வாழ்வில் ஏமாளி யாகினர் நாட்டைக்கொ டுத்து பீடாண்டு வந்தவழி மாந்தர்- பாழும் பேதைத் தனத்தைப் பிடித்துத் தடுக்கப் - போராட்டக் நாடாண்டு வந்ததமிழ் மகனே - நீயோ நாணிக் குளித்துடலம் கூனிக்கிடந்தாய் கூடாண்டு வந்தபுலி மறவா- முரசம் கொட்டடா கொட்டடா என்றுகளங் கண்டார் - போராட்டக் 21.6.1979 |