அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார் அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார் மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார் வழியேதும் தெரியாத விழியாத கண்ணார் - அயில் புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும் புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும் செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா? சிறிதேனும் உணராமல் சிலையாக நின்றார் - அயில் பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன? அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார் அணுவேனும் நகராமல் மரமாகி நின்றார் -அயில் 24.6.1979 |