பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்147

அயலாரும் துணிவோடு சதிராடு கின்றார்
அறிவாளர் திறம்யாவும் விழலாக நின்றார்
மயலோட மதிவாழ ஒருநாளும் எண்ணார்
வழியேதும் தெரியாத விழியாத கண்ணார்

- அயில்

புயலாகப் பகைசூழும் பொழுதாதல் கண்டும்
புழுவாக இனம்வீழும் நிலையாவுங் கண்டும்
செயல்காணத் துணிவேதும் உருவான துண்டா?
சிறிதேனும் உணராமல் சிலையாக நின்றார்

- அயில்

பெரியாரும் அறிவாளர் பலபேரும் வந்து
பெரும்பாடு பட்டாலும் உருவான தென்ன?
அறியாமை இருள்மூழ்கித் தடுமாறு கின்றார்
அணுவேனும் நகராமல் மரமாகி நின்றார்

-அயில்

24.6.1979