18 எப்படிப் பெரியார் வாழ்வார்? பெரியார் எப்படி வாழ்வார் -நம் பேச்சும் செயலும் பிளவுபட் டிருந்தால் - பெரியார் சரியா தவறா சடங்குகள் என்றே அறியா திருந்தால் அறிவையும் மறந்தால் - பெரியார் சாதியும் மதமும் சரிப்பட வில்லை சமுதா யந்தான் உருப்பட வில்லை மோதிய பகையோ சாய்ந்திட வில்லை மூடமும் இங்கே மாய்ந்திட வில்லை - பெரியார் சிந்தனை செய்கெனச் செப்பினர் அன்றோ? சிறிதும் நும்செவி புகுந்ததும் உண்டோ? மந்தைகள் போலினும் வாழ்வது நன்றோ? மாந்தர்கள் எனநீர் மாறுவ தென்றோ? - பெரியார் 6.12.1982 |