போர்க்கோலம் பூணுங்கள் போற்றுங்கள் தாய்மொழியை யார்க்கும் அடிமையலோம் ஆளப் பிறந்தவர்நாம் கொன்று குவித்தாலும் கூட்டில் அடைத்தாலும் நின்றமரில் தோளை நிமிர்த்துங்கள்’ என்றெல்லாம் ஆர்ப்பாட்டப் *போர்ப்பாட்டை அண்ணன் முழங்கிஒரு போர்ப்பாட்டைக் கண்டு புறங்கண்டார் இந்தியினை; செந்தமிழ் நாடாளச் செங்கோல் தனையேந்த வந்ததும் நம்தமிழ் வாழ வழிசெய்தார்; எம்முடைய நாட்டில் இரு மொழி போதுமென மும்மொழிக் கொள்கை முறிய வழிசெய்தார்; செந்தமிழைக்காத்து சிறந்த தலைமகனைப் பைந்தமிழிற் பாடிப் பரவுவதே நம்கடமை நாம்வாழ வந்தவனை நல்லவனை வாழ்த்திடுவோம் தேன்பாயும் தீந்தமிழைச் சேர்த்து.
* போர்ப்பாட்டை - போர் நெறி |