பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

23
தமிழ்நாட்டுப் பேரரண்

அறிவுடைய மாந்தரெலாம் அறிஞர் ஆகார்
       அளப்பிலநூல் பயின்றவரும் அறிஞர் ஆகார்;
நெறியொழுகி, அருள்சுரந்து, மக்கட் பண்பு
       நிறைந்திருந்து, பிறர்துயரம் துடைத்து, நல்ல
குறியுடைய வாழ்வுநெறி மலரத் தம்மைக்
       கொடுப்பவரே அறிஞராவர்; அனைத்துங் கூடி
அறிஞரெனும் சொல்லுக்கே உரிய ரானார்
       அண்ணாஎன் றழைப்பதற்கும் உரிய ரானார்.

குறளுக்கும் மூன்றெழுத்தே அண்ணா என்னும்
       குளிர்மொழிக்கும் மூன்றெழுத்தே; உலகம் போற்றும்
குறள்வகுக்கும் பால்மூன்றே அண்ணா சொன்ன
       கோட்பாடும் ஒருமுன்றே; நுவலும் பாட்டின்
உருவுக்கும் பேர்குறளே அண்ணா கொண்ட
       உருவமதும் குறளேயாம்; அதனால் அண்ணா
குறளுக்கு நிகராவார்; மேலும் வாழ்வு
       கூறுகிற குறளுக்குப் பொருளும் ஆவார்.

பாவேந்தன் பாடடுக்கோர் அரணாய் நின்றார்
       பைந்தமிழிப்பண் பாட்டுக்கும் அரணாய் நின்றார்
நாவேந்தர் கோவேந்தர் கூடிக் காத்த
       நாட்டுக்கும் அரணானார் நமது நெஞ்சப்