பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்163

25
கழகம் வென்றது

அண்ணா அண்ணா அருஞ்சிறைக் கொட்டிலுள்
நண்ணும் நுமக்கோர் நற்செய்தி கூறுவென்;
கழகம் வென்றது கதிரொளி பரந்தது;
தொழுதனர் மாந்தர் தூயவர் வாழ்த்தினர்;
காசும் பணமும் காவற் படையும்
ஏசும் பேச்சும் இவையே துணையென
நின்றனர் எதிரில் நெடுநாள் ஆள்வோர்;
இடர்பல ஏற்பினும் தொடர்பணி புரிவோர்!
உடலும் உயிரும் உழைப்பும் துணையெனப்
படைபோல் அணிவகுத் துடனெதிர் நின்றனர்;
கொல்வினைப் போக்கினர் சில்லரை நோக்கினர்
சல்லியர் கூடிச் சாடினர் நம்மை
ஐயஓ சுமத்தினர் அடாப்பழி ஆயினும்
செய்ம்முறை பிழைத்திலர் செந்தமிழ்த் தொண்டர்;
கழகம் வென்றது கதிரொளி பரந்தது;
காற்றிற் சாய்வோர் கண்டதை மேய்வோர்
தூற்றித் திரிவதே தொழிலெனக் கொண்டோர்
கோப்பை ஒன்றே குடிபுகும் உலகென
மோப்பம் பிடிப்போர் முகங்கவிழ்ந் தேகினர்
வஞ்சகர் எத்துணை வாய்ப்பறை சாற்றினும்
செஞ்சுடர் வளர்ச்சியைச் சிதைப்பதும் ஒல்லுமோ?
கோநகர் தன்னில் மாநகர் மன்றில்