பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்181

‘நம்மிற் பெரியவர்தாம் நம்மைப் பழித்துரைத்தார்
விம்மாதீர் மன்னிப்போம் விட்டு மறந்திருப்போம்’
என்று மொழிந்த இனிய குணத்தானை
நின்று வணங்கி நெடுங்காலம் வாழ்த்திடுவேன்;
நம்மிடையே வாழ்ந்து நலம்பெற்று வாழ்வுயர்ந்து
தம்பி நிலைமாறித் தாவிவிட்ட ஓர்நடிகர்
எங்கிருந் தாலுமவர் வாழ்க எனவாழ்த்திப்
பொங்கி மொழிந்தஒரு பொன்மொழியை வாழ்த்துகினறேன்;
அன்புளத்தின் ஆழம் எவரும் அறியாத
தென்புலத்தான் வாழ்க சிறந்து.

29.9.1968