பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்183

புல்லிய கொடுநோய் போக்கிய வல்லவர்
மில்லர் எனும்பெயர் மேவிய நல்லவர்
அமெரிக்க ராயினும் ஆருயிர் காத்தலால்
தமரெமக் காயினர் தமராம் அவரைப்
பொங்கும் உளத்தாற் போற்றுதும் யாமே;
எங்கள் தோழரென் றேத்துதும் யாமே
குடர்ப்புண் தீர்த்தனர் குலவிடும் எங்கள்
இடர்ப்புண் தீர்த்தனர் இனியராம் எமக்கே;
நலமுற வந்துள நல்லோய் வணக்கம்
இளகிய மனமும் இனியநன் மொழியும்
குலவிய தலைவா கூர்மதி யுடையோய்
வாழிய நெடிதே வாழிய இனிதே.

அமெரிக்க நாடு சென்று நலம் பெற்றுத் திரும்பிய
அண்ணாவுக்கு எழுதிய வரவுரை. 6.11.1968