184 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
33 யாழ் உடைந்தது விண்மீன்கள் புடைசூழ்ந்து நிற்க, வான வெளியினிலே முழமதியொன் றொளிரக் கண்டோம்; மண்மீது பயிர்தளிர்க்க உயிர்த ளிர்க்க வளர்நிலவைப் பாய்ச்சியது மகிழ்ந்தோம்; அந்தத் தண்மதியை முகிலொன்று வந்து சூழத் தன்னொளியும் மங்கியது மயங்கி நின்றோம்; *கொண்மூதான் விலகிவிடும் மேலைக் காற்று கூடிவரும் காலமிதென் றெண்ணி நின்றோம்; காற்றடித்த வேகத்தாற் கொடிய மேகம் கலைந்ததுகண் டொருவாறு தேறி நின்றோம்; கூற்றெடுத்த படையெடுப்பில் தோற்று விட்டோம்; குளிர்நிலவைக் கருணையிலான் விழுங்கிவிட்டான்; காற்றடிக்கச் சிதறுண்ட மேகம் எங்கள் கண்களிலே புகுந்துநிலை நின்ற தம்மா! கூற்றுவற்குப் பசியெடுத்தால் இந்த நாட்டைக் குளிர்விக்கும் முழுமதிதான் கிடைத்த தேயோ? வடிவமைந்த யாழொன்று தனது கையில் வைத்திருந்தாள் தமிழன்னை; அதனை மீட்டிப் படிமுழுதும் இசைமயமாப் படைத்து நின்றாள்; படர்ந்துவரும் இசைத்தேனைப் பருகி மாந்தர் உடல்நிமிர்ந்தார் உளம்நிமிர்ந்தார் உயர்வும் உற்றார்; உயர்விதனைப் பொறுக்ககிலாக் காலன் என்னும்
* கொண்மூ - மேகம் |