பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

பிறந்தனைநீ சென்னை எனும் இராச்சி யத்தில்;
       பெற்றெடுத்த தாய்நாட்டின் இழிவு நீக்கி
இறந்தனைநீ தமிழ்நாட்டில்; தமிழ்நா டாக்க
       ஏற்றதுயர் பற்பலவாம்; தன்ன லத்தைத்
துறந்தனைநீ நாட்டுநலம் ஒன்றே வேண்டித்
       தூயபணி ஏற்றனைநீ; உழைத்து ழைத்துச்
சிறந்தனைநீ; அன்புருவே காந்தி யண்ணல்
       சிந்தையெலாம் நின்செயலில் மிளிரக் கண்டோம்.

புகழ்மலையின் உச்சிக்கே சென்று விட்டாய்!
       புவியாளும் முதலமைச்சும் பெற்று விட்டாய்!
மகிழ்வுற்றுச் செருக்குற்றுத் திரிந்தா யல்லை;
       மன்னவனே ‘சாமான்யன்’ என்றே உன்னை
இகழ்வாக அடக்கமுடன் சொல்லி வந்தாய்!
       இனியிந்த அடக்கத்தை எங்குக் காண்போம்?
தகவுடையாய் அடக்கத்தை அடக்கம் செய்தோம்
       தணியாத துயர்க்கடலில் மூழ்கி விட்டோம்.

16.2.1969