198 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
நேருக்கு நேராக நிற்பவனோ என்னினத்தான்; என்செய்வேன் அண்ணா இனத்தான் பகையானால்? தன்மொழிக்குத் தானே தடையாக நிற்கின்றான்; நாடாண்ட நம்மினமும் நற்றமிழும் தாயகமும் பீடாண்டு கொள்ளப் பெரும்பாடு பட்டிங்கு வாழுங் கழகத்தை வாட்டி ஒழிப்பதற்குத் தாளம் இடுபவரைத் தந்நலமே கொண்டவரை நம்பி ஒருமனிதன் நாடகங்கள் ஆடுகிறான்; வெம்பித் தளர்ந்துமிகும் வேதனையால் நொந்தேன்; உடனிருந்தே கொல்லும் உறுபிணிபோ லாகிக் கடலிலங்கை வீடணனாய்க் கைவரிசை காட்டி, அரியணையின் மீதேறும் ஆசை மனத்துள் மருவும் குடிலனென மாறிமனம் போய்விட்டான்; என்றுநான் சொன்னேன் இடைமறித்துத் ‘தம்பீ நீ இன்றுரைத்த உன்மொழியை என்செவிகள் ஏலா எதுவரினும தாங்கும் இதயத்தைப் பெற்றால் கதுவவரும் துன்பம் கடிதின் விலகு’மென்றான்; என்பால் வருகின்ற எத்துயருந் தாங்கிடுவேன் அன்பால் உயரண்ணா அன்னைத் தமிழ்மொழிக்குத் தீங்கு வருமென்றால் தேறுவ தெப்படியோ? ஏங்குகிறேன் அண்ணாநீ என்னவழி சொல்கின்றாய்? கண்ணாகக் காக்கும் கழகத்தை மாய்க்கவரின் புண்ணாக என்மனந்தான் போகாதோ? நீ புகல்வாய்; என்று மனம்நொந் திருவிழிகள் நீர்சொரிய நின்றேன்; அறிஞர் நிறைமொழி வாய்மலர்ந்தார்; ‘செந்தமிழ்க்கா தீங்கு? சிறிதேனும் வாராது; முந்தை வரலாற்றை முன்னிறுத்திச் சிந்தனைசெய்! எத்தனைக் கற்கள் தடைபோல் இருந்தாலும் அத்தனையும் மோதி அகற்றும் மொழியாம் தனக்கு வரும்பகையைத் தானே தகர்க்கும் தனித்திறமை கொண்டிலங்கும் தாய்மொழிக்காதீங்கு? பழகுதமிழ்ப் பண்பாட்டைப் பாரில்நிலை நாட்டும் |