பக்கம் எண் :

20கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

சீறிவரும் வேகத்தில் அந்தக் கும்பல்
       சிறுவர்விடு கப்பலென மூழ்கிப் போகும்.

உள்ளத்தை உயிர்தன்னை உயிரைத் தாங்கும்
       உடல்தன்னை வள்ளுவற்குப் பின்னே போக்கி
வள்ளுவத்துக் கோட்பாட்டை நன்கு ணர்ந்து
       வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நிற்போம்;
வள்ளுவத்தைப் பெற்றதிரு நாட்ட கத்தே
       வாழ்கின்ற பேறுற்றோம்; ஆத லாலே
பள்ளத்தில் வீழாமல் இன்ப வானில்
       பறக்கின்ற நிலைபெறுவோம் வாரீர்!வாரீர்!