பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்21

5
கனவின் நிழல்

உள்ளத்து மாசகற்ற ஓதும் புலவனுக்குத்
தெள்ளத் தெளிந்து திருநாள் எடுத்தவர்கள்
பாடென் றெனக்கோர் பணிதந்து விட்டமையால்
ஏடொன் றெடுத்தே எழுத முனைந்திருந்தேன்
பேரறிவு கூடிப் பிறந்திங்கு வந்தது போல்
கூரறிவு கொண்ட குறளடியான் என்முன்னே
வந்து நகைத்துநின்றான்; வாவென்றேன் யாரென்றேன்;
‘முந்து தமிழ்மாலை முனைந்து புனைவோனே!
ஈரா யிரத்தாண்டின் முன்னே எழுந்தவன்யான்
ஓரா திருந்தனையே உன்னறிவை என்னென்பேன்!
என்பெயரைச் சொல்லி எடுக்குந் திருநாளில்
என்னை யறியா திருக்கின்றாய்’, என்றுரைத்தான்;
சொன்ன குறிப்பாலே தூயமறை தந்தவனை
முன்னவனை முப்பால் மொழிந்தவனைக் கண்டுணர்ந்து
செந்தமிழ்த்தாய் தந்த திருமகனே நின்னுருவம்
எந்தவிதம் உண்டென்று யானறியேன்; ஈங்குள்ளோர்
கண்டபடி கைவண்ணங் காட்டிப் பலவடிவம்
கொண்டமைத்து விட்ட கொடுமையினால் மெய்வடிவம்
காண வியலேன் கடியா தெனைப்பொறுப்பாய்
பேணி உனைவணங்கும் பெற்றிமையன் நானையா
என்றப் பெரியோன் இணையடியைப் பற்றிநின்றேன்;
‘நன்று தமிழ்மகனே நான்மொழிந்த முப்பாலை
ஓதி யுணராமல் ஓதும் நெறிநிற்க


*ஆகுலம் - ஆரவாரம்